கோயம்புத்தூர்

வனபத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஆடிக் குண்டம் திருவிழா

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

DIN

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடிக் குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
 விழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் தேதி பூச்சாட்டப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்க உள்ளனர். 
 இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக வந்துள்ளனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT