கோயம்புத்தூர்

கடற்படை பெண் அதிகாரிக்கு  சிறந்த மகளிர் விருது

DIN

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான ஃப்ளோ அமைப்பு சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கடற்படை பெண் அதிகாரி பி.ஸ்வாதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் அமைப்பான "ஃப்ளோ' மகளிர் அமைப்பு சார்பில் சாதனா என்ற பெயரில் மகளிர் தின விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கடற்படை அதிகாரி பி.ஸ்வாதி பங்கேற்றார். இவருக்கு சிறந்த மகளிருக்கான விருது வழங்கப்பட்டது.  விருதை ஏற்றுக்கொண்ட பி.ஸ்வாதி, கடற்படையில் தனது அனுபவங்கள் குறித்து பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.  நிகழ்ச்சியில், கோவை கடற்படைத் தளத்தின் உயரதிகாரி ராஜீவ் சௌத்ரி, ஃப்ளோ அமைப்பின் தேசியத் தலைவர் பிங்கி ரெட்டி, கோவை கிளைத் தலைவர் ஜெயந்தி மனோகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT