கோயம்புத்தூர்

பெண்ணிடம் நகைப் பறிப்பு

DIN

சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மளிகைக் கடையில் பொருள் வாங்க வந்த நபர் பெண்ணிடம் நகையைப் பறித்து சென்றார். 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பட்டுமாரி. இவர்கள் சூலூர் அருகே காங்கேயம்பாளையத்தில் மளிகைக் கடை  நடத்தி வருகின்றனர். 
இவரது கடைக்கு பொருள்கள் வாங்க ஒருவர் வெள்ளிக்கிழமை இரவு வந்துள்ளார். பொருள் வாங்கிய பின்னர் அதற்கு பில் கேட்டுள்ளார். அப்போது பட்டுமாரி பில் போட்டுக்கொண்டிருந்தபோது, அவரிடம் இருந்த  5 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பி செல்ல முயன்றுள்ளார்.  அப்போது பட்டுமாரி சப்தமிடவே, அந்த நபர்,  தான் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT