கோயம்புத்தூர்

கற்பகம் மருத்துவமனையில் கண்புரைக்கு அதி நவீன மருத்துவ சிகிச்சை

கோவை, ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சையில்லா நவீன சிகிச்சை மூலம் தீர்வு அளிக்கப்படுகிறது.

DIN

கோவை, ஒத்தக்கால்மண்டபம் கற்பகம் மருத்துவமனையில் கண்புரைக்கு அறுவை சிகிச்சையில்லா நவீன சிகிச்சை மூலம் தீர்வு அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூரைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (65) என்பவர் கண் புரை காரணமாக பார்வையை முழுவதுமாக இழந்து அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவருக்கு, மருத்துவக் கல்லூரி பேராசிரியரும், கண் மருத்துவருமான நேகா தலைமையிலான மருத்துவக் குழுவினர், மயக்க ஊசி, அறுவை இல்லாமல் சொட்டு மருந்துகளை உபயோகித்தே புரையை நீக்கினர்.
இதையடுத்து ஒரே நாளில் இழந்த பார்வையை மீட்ட தட்சிணாமூர்த்தி, மறுநாளே வீடு திரும்பினார். இதுபோன்ற அதி நவீன மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக, தங்குமிடம், உணவு செலவுகள் ஏதுமின்றியே ஏழை நோயாளிகளுக்கு அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT