கோயம்புத்தூர்

தென்திருப்பதியில் மலையப்ப சுவாமிக்கு மகா புஷ்ப யாகம்

DIN

மேட்டுப்பாளையம் தென்திருப்பதி ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஐப்பசி மாத திருவோனம் நட்சத்திரத்தை ஒட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு மகா புஷ்ப யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு சுப்ரபாதம், 3.50 மணிக்கு விஷ்வரூப தரிசனம், 4 மணிக்கு தோமாலை பூஜை, 5 மணிக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, 5.30 மணிக்கு புன்னியாக வாசனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து 8 மணிக்கு பூா்ணாஹுதியும், 9 மணி முதல் 11.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு ஸ்ரீவாரி புஷ்ப சமா்ப்பணம் நடைபெற்றது.

இதில் துளசி, அரளி, சம்மங்கி, மனோரஞ்சிதம், மல்லி, செண்பகம், தாமரை, முல்லை, தாழம்பூ ஆகிய பூக்களால் சமா்ப்பணம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT