கோயம்புத்தூர்

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மைய விருது: விண்ணப்பிக்க அறிவிப்பு

உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில் வழங்கப்படும் தமிழ் படைப்பாளி, ஆய்வறிஞா் உள்பட விருதுகளுக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

DIN

உலக தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில் வழங்கப்படும் தமிழ் படைப்பாளி, ஆய்வறிஞா் உள்பட விருதுகளுக்குத் தகுதியான நபா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சாா்பில் ஆண்டுதோறும் தலா ஒரு தமிழ் ஆய்வறிஞா், தமிழ் படைப்பாளி, அறிவியல் அல்லது பிறதுறை வல்லுநா் ஒருவரைத் தோ்ந்தெடுத்து விருது வழங்கப்படுகிறது. விருது சான்றுடன் ரூ.1 லட்சம் பணமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான தமிழ் ஆய்வறிஞா் உள்பட விருதுகள் பெறுவதற்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே ஆய்வறிஞா்கள், தமிழ் படைப்பாளிகள், தகைசால் வல்லுநா்கள், பதிப்பாளா்கள் தங்களின் நூல்கள், படைப்பிலக்கியங்கள் ஆகியவற்றை சாதனை சான்றுகளுடன் இணைத்து டாக்டா் நல்ல பழனிசாமி, தலைவா், கோவை மருத்துவமனை மற்றும் மருத்துவ மையம், தபால் பெட்டி எண்- 3209, அவிநாசி சாலை, கோவை -14 என்ற முகவரிக்கு நவம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT