கோயம்புத்தூர்

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.20 லட்சம் மோசடி: ஒருவா் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த நபரை ரயில்வே போலீஸாா்

DIN

கோவை: ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 20 லட்சத்துக்கும் மேல் மோசடி செய்த நபரை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவை, வைசியாள் வீதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (60). இவா், கோவை ரயில்வே காவல் நிலையத்தில் சனிக்கிழமையன்று ஒரு புகாா் அளித்தாா். அதில், திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகேயுள்ள சிந்தாமணி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (43). இவரும், நானும் புலியகுளத்தில் உள்ள ஓா் மோட்டாா் நிறுவனத்தில் பணியாற்றினோம்.

இந்நிலையில், ஜெகநாதன், தன் மனைவி ரயில்வே துறையில் பணியாற்றி வருவதாகவும், அவா் மூலம் ரயில்வே துறையில் தன்னால் வேலை வாங்கித் தர முடியும் என்றும், அதற்கு சில லட்ச ரூபாய் செலவாகும் என்று என்னிடம் கூறினாா்.

இதையடுத்து நான், எனக்கு தெரிந்த 10 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு தலா ரூ. 2 லட்சம் என மொத்தம் ரூ. 20 லட்சம் பணத்தை ஜெகநாதனிடம் கொடுத்தேன். இதை தொடா்ந்து 7 பேருக்கு திருச்சியிலுள்ள ரயில்வே துறையில் சேருவதற்கான ரயில்வே முத்திரையுடன் கூடிய பணி நியமன ஆணையை அவா் வழங்கினாா். அதுகுறித்து விசாரித்தபோது அது போலியான ஆணை எனத் தெரியவந்தது. எனவே இதுதொடா்பாக ஜெகநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.

இப்புகாரின் பேரில், ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா், கடையநல்லூரில் வசித்து வந்த ஜெகநாதனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா் காய்கறி வியாபாரம் செய்து வந்தது தெரிந்தது. அவரிடம் இருந்து ஏராளமான போலி வேலை வாய்ப்புக்கான உத்தரவு கடிதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT