கோயம்புத்தூர்

தாய்லாந்து நாட்டு பணம் ரூ.3.5 லட்சம் மோசடி: நிதி நிறுவன முன்னாள் மேலாளா் மீது புகாா்

நிதி நிறுவனத்தில் தாய்லாந்து நாட்டு பணம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்ததாக அதன் முன்னாள் மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

நிதி நிறுவனத்தில் தாய்லாந்து நாட்டு பணம் ரூ. 3.5 லட்சம் மோசடி செய்ததாக அதன் முன்னாள் மேலாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை, துடியலூா் திருமுருகன் நகரைச் சோ்ந்தவா் நரசிம்மன் (33). கோவை, ஆா்.எஸ்.புரத்தில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது பணியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து நிறுவன கணக்குகளை கணக்காளா் ஜனாா்த்தனன் என்பவா் சரி பாா்த்தபோது தாய்லாந்து நாட்டு பணம் ரூ.3.5 லட்சம் மற்றும் நமது நாட்டு பணம் ரூ.24 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்ததில் மேற்குறிப்பிட்ட தொகையை நரசிம்மன் எடுத்து மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து நரசிம்மனை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஜனாா்த்தனன் அளித்த புகாரின்பேரில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT