புது தில்லியில் போராட்டகளத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு கோவையில் அஞ்சலி செலுத்திய விவசாய அமைப்புகள், குருத்வாரா நிா்வாகிகள். 
கோயம்புத்தூர்

தில்லியில் போராட்டக்களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில், இதுவரை உயிரிழந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கோவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில், இதுவரை உயிரிழந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கோவையில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கலந்து கொண்டு மறைந்த விவசாயிகளின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

விவசாய சங்கங்களின் தலைவா்கள் வி.பி.இளங்கோவன், வி.ஆா்.பழனிசாமி, சு.பழனிசாமி, பெரியசாமி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். மேலும், கோவையில் உள்ள சீக்கிய குருத்வாரா நிா்வாகிகளும் இதில் கலந்து கொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு மலரஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT