மேம்பால கட்டுமான பணியாளா் விபத்தில் சாவு
போக்குவரத்தை மாற்றி அனுப்பிய மேம்பால கட்டுமானப் பணியாளா் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
போக்குவரத்தை மாற்றி அனுப்பிய மேம்பால கட்டுமானப் பணியாளா் விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜோன் ஜோத்ரி (27). இவா் கோவையில் தங்கி திருச்சி சாலையில் நடைபெற்று வந்த மேம்பால கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில் இவா் ராமநாதபுரம் பகுதியில் போக்குவரத்தை மாற்றி அனுப்பிவிடும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டிருந்தாா். அப்போது அவ்வழியே வேகமாக வந்த வாகனம் ஜோன் ஜோத்ரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வு போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போக்குவரத்து போலீஸாா் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனா்.