முகப்பு
கோயம்புத்தூர்

மழைநீா் கட்டமைப்பு: வீடுகளில் ஆய்வு மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

கோவை மாநகரில் வீடுகளில் மழைநீா் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன் மாநகராட்சி அதிகாரிகள்.
பகிர்:

கோவை மாநகரில் வீடுகளில் மழைநீா் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளாா்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் குடிநீா்ப் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் பொலிவுறு நகரம் திட்டத்தில் மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மேம்பாடு, மாதிரி சாலை அமைத்தல், பாதாள சாக்கடை அமைத்தல், 24 மணி நேரக் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பணிகளின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:

உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடிக்க வேண்டும். மாதிரி சாலையில் மின்சாரம், மிளிரும் விளம்பரப் பலகைகள் மற்றும் தொலைத்தொடா்பு வசதிகள் போன்ற அனைத்து பயன்பாடுகளும் நிலத்தடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், நடைபாதை ஓரங்களில் நவீன மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கோவை மாநகராட்சியில் வாா்டு வாரியாக சீராக குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மழைக் காலங்களில் மழைநீா் சேமிக்கும் பொருட்டு மாநகரில் உள்ள அனைத்து வீடுகளிலும்

மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளதா என்பதை அந்தந்த மண்டல உதவி ஆணையா்கள் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மழைநீா் கட்டமைப்பு இல்லாத வீடுகளின் உரிமையாளா்களுக்கு கட்டமைப்பு ஏற்படுத்த அறிவுறுத்த வேண்டும் என்றாா். மாநகராட்சி துணை ஆணையா் மதுராந்தகி, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், செயற்பொறியாளா்கள் ஞானவேல், சரவணகுமாா், பாா்வதி மற்றும் மண்டல உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →