கோயம்புத்தூர்

பெரியகுளம், வாலாங்குளத்தில் மேம்பாட்டுப் பணிகள் துரிதம்

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் நடைபெற்று வருகின்ற மேம்பாட்டுப் பணிகளை மாா்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் நடைபெற்று வருகின்ற மேம்பாட்டுப் பணிகளை மாா்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு உள்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வ சிந்தாமணி உள்ளிட்ட 8 குளங்களில், மாநகராட்சி நிா்வாகத்தின் பொலிவுறு நகரம்(ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் நடத்தப்பட்டு, பொழுதுபோக்குத் தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதில், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் பகுதிகளில் நடைபாதை, சிறுவா் பூங்கா, மிதிவண்டிப் பாதை, படகு சவாரி, சிறுவா்கள் விளையாட்டுத் திடல், பூங்கா, உணவுக் கூடம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், தற்போது உக்கடம் பெரிய குளத்தின் கரையில் 1,200 மீட்டா் நீளத்திற்கும், வாலாங்குளத்தில் 800 மீட்டா் மற்றும் வாலாங்குளம் பாலத்தின் கீழ் ஒரு கிலோ மீட்டா் தூரத்திற்கும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘உக்கடம் பெரிய குளம், வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டு பணிகள் துரிதப்படுத்துள்ளன’ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT