காய்கறி அலங்காரத்தில் சேவைசாதித்த மருதூா் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயா். 
கோயம்புத்தூர்

மருதூா் அனுமந்தராய சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மருதூா் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் மாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.

DIN

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள மருதூா் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் மாசி மாதம் முதல் சனிக்கிழமை விழா நடைபெற்றது.

மருதூா் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அனுமந்தராய சுவாமி என அழைக்கப்படும் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயா் கோயிலில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமையும் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாசி மாதம் முதல் சனிக்கிழமை விழாவையொட்டி அனுமந்தராய சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காய்கறி அலங்காரத்தில் ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயா் சேவைசாதித்தாா்.

முன்னதாக ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் டி.பாண்டுராஜின் சொற்பொழிவும், முத்துக்கல்லூா், காரமடை மேற்கு வட்டார பஜனைக் குழுவினரின் பஜனையும் நடைபெற்றது. மேட்டுப்பாளையம், உதகை, குன்னூா், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, புஜங்னூா், தாயனூா், வெள்ளியங்காடு, தோலம்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT