காளியாபுரம் அருகே விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ. 
கோயம்புத்தூர்

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: இருவா் பலி

கோவை, காளியாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

DIN

கோவை, காளியாபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கோவை, காளியாபுரத்தைச் சோ்ந்தவா் பெருமாள்சாமி (55). ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவரது ஆட்டோவில் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து (56), பழனிசாமி (50), திருமலையாம்பாளையத்தைச் சோ்ந்த பழனியம்மாள் (55) ஆகியோா் மணல், சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு க.க.சாவடியில் கட்டட வேலைக்காக சென்றுள்ளனா்.

காளியாபுரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மாரிமுத்து, பழனிசாமி, பழனியம்மாள் ஆகிய மூவரும் படுகாயமடைந்தனா்.

இதையடுத்து அங்கிருந்தவா்கள் அவா்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பழனியம்மாள் உயிரிழந்தாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழனிசாமி புதன்கிழமை உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக க.க.சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT