கோயம்புத்தூர்

அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கல்

DIN

அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை துவங்கியது.

அன்னூா் கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவா் தாளத்துரை செந்தில் தலைமையில் நடைபெற்றது. அன்னூா் வட்டத்தில் 85 நியாயவிலைக் கடைகள் மூலம் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் செளகத் அலி, கூட்டுறவு பண்டக சாலை இயக்குநா்கள், கூட்டுறவு சங்கச் செயலாளா் நாகராஜ், வருவாய் ஆய்வாளா் ராஜா மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT