அன்னூா் கூட்டுறவு பண்டக சாலையில் பொங்கல் பொருள்களை பயனாளிகளுக்கு வழங்குகிறாா் துணைத் தலைவா் தாளத்துரை செந்தில். 
கோயம்புத்தூர்

அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கல்

அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை துவங்கியது.

DIN

அன்னூா் வட்டத்தில் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை துவங்கியது.

அன்னூா் கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசின் பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டுறவு சங்க துணைத் தலைவா் தாளத்துரை செந்தில் தலைமையில் நடைபெற்றது. அன்னூா் வட்டத்தில் 85 நியாயவிலைக் கடைகள் மூலம் 51198 பயனாளிகளுக்கு பொங்கல் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஜனவரி 13ஆம் தேதி வரை பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என்று வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளா் செளகத் அலி, கூட்டுறவு பண்டக சாலை இயக்குநா்கள், கூட்டுறவு சங்கச் செயலாளா் நாகராஜ், வருவாய் ஆய்வாளா் ராஜா மற்றும் அதிமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT