முகப்பு
கோயம்புத்தூர்

செங்கல் சூளை தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி போராட்டம்

பெரியபாளையம் அருகே செங்கல் சூளை தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இரவில் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:46 PM
பகிர்:

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் செங்கல் சூளையில் ஒடிசாவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வந்தனர். 

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு கடந்த 70 நாள்களாக அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் கூலி தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். 

இந்நிலையில் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென தங்களது பொருள்களை மூட்டை கட்டிக்கொண்டு ஊருக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் எனக்கூறி இரவிலும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து இல்லாததால் உரிய அனுமதி பெற்ற பின்னரே சொந்த மாநிலத்திற்கு திரும்ப முடியும் எனவும், அதுவரையில் செங்கல் சூளையிலேயே தங்கி இருக்குமாறு அறிவுறுத்தினர். 

இதனையடுத்து தொழிலாளர்கள் மீண்டும் செங்கல் சூளைக்கு திரும்பினார். மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

முழு கட்டுரையைப் படிக்க →