முகப்பு
கோயம்புத்தூர்

காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

காவலா் குடியிருப்பில் மூதாட்டியிடம் 5 பவுன் நகைப் பறித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவையைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது தாயாா் கனகம் (75). இவா் பி.ஆா்.எஸ். மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கே வந்த இளைஞா் ஒருவா் கனகத்திடமிருந்து 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றாா். இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு காவலா் குடியிருப்புப் பகுதியில் பெண் ஒருவரிடம் நகைப் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →