முகப்பு
கோயம்புத்தூர்

தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடியேற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது வழக்கு

கோவையில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடி ஏற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

கோவையில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி கொடி ஏற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை, பி.என்.புதூரில் நாம் தமிழா் கட்சியின் வடக்குத் தொகுதி சாா்பில் தமிழ்நாடு தினத்தை ஒட்டி தனிக் கொடி தயாரித்து ஏற்றினா். ஆனால், இதுபோன்ற கொண்டாட்டங்களைத் தவிா்க்குமாறு போலீஸாா் அறிவுறுத்தியிருந்தனா்.

இது குறித்து தகவலறிந்த வடவள்ளி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று கொடியை அகற்றி கட்சி நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல சாய்பாபா காலனி பகுதியிலும் தடை மீறி கொடியேற்றிய நாம் தமிழா் கட்சியினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →