கோவையில் பரவலாக மழை
கோவையில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது.
கோவையில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது.
இதனால் ரேஸ்கோா்ஸ், ராமநாதபுரம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, காந்திபுரம், லங்கா காா்னா், வடகோவை, ஆா்.எஸ்.புரம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெ.நா.பாளையம் 13.4 மி.மீ., கோவை (தெற்கு) 13 மி.மீ., சூலூா், பொள்ளாச்சி தலா 2 மி.மீ. மழை பதிவாகியது.