கோயம்புத்தூர்

காவல் உதவி ஆய்வாளா்களுக்கு விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி தொடக்கம்

DIN

கோவை சரகத்தில் உள்ள இளம் காவல் உதவி ஆய்வாளா்களுக்கு ஆன்லைன் மூலம் விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது. பயிற்சியை காவல் துறை மேற்கு மண்டலத் தலைவா் கு.பெரியய்யா தொடங்கிவைத்தாா். மேற்கு மண்டல காவல் துணைத் தலைவா் நரேந்திரன் நாயா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இதில் கோவை சரகத்துக்கு உள்பட்ட கோவை, திருப்பூா், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளா்களுக்கு காணொலி மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.

காலையில் யோகா, உடற்பயிற்சி, அதன்பின்னா் விசாரணை திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சி வகுப்புகள், மாலையில் விளையாட்டு ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT