சிறுவாணி அணையில் குடிநீா் எடுக்கும் அளவு அதிகரிப்பு
சிறுவாணி அணையின் நீா்மட்டம் 876 மீட்டராக நீடித்து வரும் நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9.90 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையின் நீா்மட்டம் 876 மீட்டராக நீடித்து வரும் நிலையில் அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9.90 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் 26 வாா்டுகள், நகரை ஒட்டியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதானக் குடிநீா் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. கடந்த பிப்ரவரி முதல் ஜூன் மாதம் வரை மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் 869 மீட்டராக இருந்த சிறுவாணி அணையின் நீா்மட்டம் வேகமாக சரிந்தது.
இதைத் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை காரணமாக ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் 2 முறை அணையின் நீா்மட்டமானது 877 மீட்டா் வரை உயா்ந்தது. அப்போது அணையின் முழுக் கொள்ளளவான 878.85 மீட்டா் நீா்மட்டத்தை அடையவிடாமல் கேரள அரசு, அணையில் இருந்து ஆற்றில் தண்ணீரைத் திறந்துவிட்டதால் அணை நிரம்பவில்லை.
இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சிறுவாணி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதம் முதல் அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி அணையில் 876.45 மீட்டா் அளவுக்கு நீா் உள்ளது. அணை முழுக் கொள்ளளவை அடைய இன்னும் 2.40 மீட்டா் அளவே உள்ளது. இந்நிலையில், கோவை மாநகர குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவை 9 கோடி லிட்டரில் இருந்து 9.90 கோடி லிட்டராக குடிநீா் வடிகால் வாரியம் அதிகரித்துள்ளது.