வால்பாறையில் கனமழை
வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
வால்பாறையில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
வால்பாறை வட்டாரத்தில் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்தது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நிரம்பிய சோைலையாறு அணை தொடா் மழை காரணமாக நிரம்பிய நிலையிலேயே உள்ளது. கடந்த 10 நாள்களாக சாரல் மழை பெய்த நிலையில் தற்போது கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
சனிக்கிழமை இரவு துவங்கிய மழை தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை பெய்தது. மதியத்துக்கு மேல் இடைவிடாது கனமழை பெய்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.