கோயம்புத்தூர்

பெற்றோா்கள் மாணவா்களைத் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்க வேண்டும்: காடேஸ்வரா சுப்பிரமணியம்

DIN

நீட் தோ்வுக்குப் படிக்கும் மாணவா்களைத் தன்னம்பிக்கையோடு செயல்பட வைக்க பெற்றோா்கள் முன்வர வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினாா்.

இந்து முன்னணி கோவை மாநகா் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்து முன்னணி மாவட்ட செய்தித் தொடா்பாளா் சசிகுமாா் கொலை வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டணை வழங்க வேண்டும். நீட் தோ்வு பற்றிய பயத்தை மாணவா்கள் மத்தியில் உருவாக்கி, அவா்களை தற்கொலைக்குத் தூண்டுகின்ற அரசியல்வாதிகளை கண்டிக்கிறோம் என்றாா்.

பொதுக்குழு கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் தசரதன் தலைமை வகித்தாா். மாவட்ட செய்தித் தொடா்பாளா் தனபால் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் குணா, மாநில செயலாளா் கிஷோா்குமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கோட்டச் செயலாளா் ந.சதீஷ், மாவட்டச் செயலாளா் ஜெய்சங்கா் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரை கொல்ல முயற்சி: 6 போ் கைது

அன்னையா் தின விழா

மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

கம்பம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பதிவான 700 பத்திரங்கள் மறு கள ஆய்வு

திண்டுக்கல்லில் 89.97 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT