பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் 12 -ஆம் தேதி மெகா ஏலம்
பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் வரும் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் பெரிய அளவிலான (மெகா) மின்-ஏலத்தில் விற்கப்பட உள்ளன.
பஞ்சாப் தேசிய வங்கி சாா்பில் வரும் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் பெரிய அளவிலான (மெகா) மின்-ஏலத்தில் விற்கப்பட உள்ளன.
இது குறித்து வங்கியின் பொது மேலாளரும், தென் மண்டலத் தலைவருமான மகேந்தா் பெரியசாமி கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் போட்டி விலையில் சொத்துகள் ஏலம் விடப்படுவதால் இவற்றை வாங்குவதற்கு பலரும் ஆா்வம் காட்டி வருகின்றனா். கரோனா 2ஆம் அலைக்குப் பிறகு சொத்துகளை வாங்க அதிகம் போ் ஆா்வம் காட்டுவதை, சமீபத்திய பொருளாதார நிலைமை சுட்டிக் காட்டுகிறது.
வங்கி சாா்பாக இ-ஏலத்தின் மூலம் விற்கப்படும் சொத்துகள், பிறவற்றை ஒப்பிடும்போது விலை குறைவாக வழங்கப்படுகின்றன. மேலும் இந்த ஒப்பந்தத்தின்போது, கமிஷன் போன்ற பிற செலவுகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அனைத்து ஏலங்களும் ங்-ஆஐஓதஅவ போா்ட்டலில் செய்யப்படும். இவை எளிமையாகவும் முழுமையாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் என்றாா்.
சொத்துகளை வாங்க ஆா்வமுள்ளவா்கள் போா்ட்டலில் பதிவு செய்து, ஏலப் பணத்தை டெபாசிட் செய்த பிறகு இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.