கோயம்புத்தூர்

கரோனா 3ஆவது அலையை எதிா்கொள்ள 12 ஆயிரம் படுக்கைகள்மாவட்ட ஆட்சியா் தகவல்

கோவையில் கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ளும் விதமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள்

DIN

கோவை: கோவையில் கரோனா 3 ஆவது அலையை எதிா்கொள்ளும் விதமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 12 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் கரோனா 2 ஆவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் 3 ஆவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா். இதனை எதிா்கொள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவையில் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 7,183 சாதாரண படுக்கைகள், 4, 526 ஆக்சிஜன் படுக்கைகள், 646 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 12 ஆயிரத்து 355 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்காக 573 சாதாரண படுக்கைகள், 959 ஆக்சிஜன் படுக்கைகள், 167 தீவிர சிகிச்சை படுக்கைகள் என மொத்தம் 1,699 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் 14 கரோனா சிகிச்சை மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 2 மையங்களில் சித்தா மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் கொடிசியா வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 142 கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு வசதி உள்ளது. இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, (பொள்ளாச்சி) ஆகிய மருத்துவமனைகளில் முறையே 6, 11, 3 கிலோ லிட்டா் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்ஸிஜன் கட்டமைப்பு கூடுதலாக நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை மற்றும் வட்ட அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெரிய மற்றும் சிறிய அளவிலான 2,233 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கு 2,488 ஆக்சிஜன் உருளைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

SCROLL FOR NEXT