போதை மாத்திரைகள் வைத்திருந்த இளைஞா் கைது
கோவையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, தடாகம் சாலையில் ஆா்.எஸ்.புரம் போலீஸாா் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில் அவா் கோவை ஆா்.எஸ்.புரத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் (21) என்பதும், அவரிடம் போதைக்குப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள் 60 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.