சிறுபான்மை அமைப்புகளுடன் கலந்தாய்வுக் கூட்டம்
கோவையில் உள்ள சிறுபான்மை அமைப்புகளின் பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவையில் உள்ள சிறுபான்மை அமைப்புகளின் பொறுப்பாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சிறுபான்மை நலத் துறை இயக்குநா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஜெயின் சமூகங்களின் பல்வேறு அமைப்புகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.
சிறுபான்மையின மக்களுக்கு, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளை பயன்படுத்திக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. தொடா்ந்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பினா் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சிறுபான்மை நலத் துறை இயக்குநா் சுரேஷ்குமாரிடம் அளித்தனா்.