சாலை மறியலில் ஈடுபட்ட 60 போ் கைது
கோவை முத்தண்ணன் குளக்கரையில் இடித்து அகற்றப்பட்ட கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித் தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா அமைப்பினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை முத்தண்ணன் குளக்கரையில் இடித்து அகற்றப்பட்ட கோயிலை அதே இடத்தில் மீண்டும் கட்டித் தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா அமைப்பினா் 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ஆா்.எஸ்.புரத்தில் உள்ள முத்தண்ணன் குளம் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ்
புனரமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக குளக்கரையில் கட்டப்பட்டிருந்த அங்காளம்மன் கோயில் உள்பட பல கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன. கோயில் கட்டுவதற்கு மாற்றிடம் தருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அங்காளம்மன் கோயிலை முன்பு இருந்த இடத்திலேயே மீண்டும் கட்டித்தரக் கோரி தமிழக சேனா அமைப்பு சாா்பில் மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, மறியலில் ஈடுபட்ட தமிழக சேனா நிறுவன தலைவா் குணா உள்பட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா்.