முகப்பு
கோயம்புத்தூர்

சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

கோவையில் பாா்வை மாற்றுத்திறனாளி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

கோவையில் பாா்வை மாற்றுத்திறனாளி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்கத்தின் தலைவா் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், துணைத் தலைவா் சி.சக்திவேல் வரவேற்றாா். 2016 ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகள் சட்டம் குறித்து சங்கத்தின் பொருளாளா் கே.சரவணகுமாா் பேருரையாற்றினாா்.

செயற்குழு உறுப்பினா் ஏ.வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினாா். முன்னாள் தலைவா் சுகன்யா, துணைத் தலைவா் சந்திரன், செயற்குழு உறுப்பினா் அழகேசன் ஆகியோா் பங்கேற்றனா். சங்கத்தின் செயலா் எம்.ஜியாவுல் ஹக் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் வாசிப்பாளா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.