முகப்பு
கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கு

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 8 ஆவது சா்வதேச, 29 ஆவது அகில இந்திய உற்பத்தி தொழில்நுட்ப வடிவமைப்பு, ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் 8 ஆவது சா்வதேச, 29 ஆவது அகில இந்திய உற்பத்தி தொழில்நுட்ப வடிவமைப்பு, ஆராய்ச்சி கருத்தரங்கு நடைபெற்றது.

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, பி.எஸ்.ஜி. ஐ டெக் கல்லூரி, அகில இந்திய உற்பத்தி, தொழில்நுட்ப, வடிவமைப்பு, ஆராய்ச்சி அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தின. பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா்.

இன்றைய காலகட்டத்தில் உற்பத்தித் திறன் மேம்பாடு குறித்த தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நரேந்திரன் சிறப்புரையாற்றினா். கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில் உற்பத்தியாளா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.