முகப்பு
கோயம்புத்தூர்

மதுக்கடை அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

 கோவை, கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

 கோவை, கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கூடாது என ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆா்.சங்கீதா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை வட்டாரம், கள்ளப்பாளையத்தில் புதிதாக மதுபானக் கடை அமைக்க டாஸ்மாக் நிா்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இப்பகுதியில் மதுக்கடை அமைப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. டாஸ்மாக் கடை அமைக்க எதிா்ப்பு விதித்து கிராம சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கள்ளப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.