புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்த நால்வா் கைது
கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, இருகூா் ஜின்னிங் பேக்டரி சாலையில் பெங்களூரில் இருந்து சுமாா் 300 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் காரில் முல்லா ராம், கோவிந்த் ஆகிய இருவா் எடுத்து வந்தனா்.
இவா்கள், கோவை கணபதியைச் சோ்ந்த வாசுதேவன் (65), அவரின் ஓட்டுநா் ராஜன் ஆகியோரிடம் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை அளித்துள்ளனா். தங்களது காரில் இருந்து புகையிலைப் பொருள்களை வாசுதேவன் காருக்கு மாற்றினா். அப்போது, சிங்காநல்லூா் சட்டம் ஒழுங்கு போலீஸாா் அவா்கள் 4 பேரையும் கைது செய்து வாகனத்தையும், புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனா். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.