வங்கி ஊழியா்கள் இரண்டாவது நாளாகப் போராட்டம்
கோவையில் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவையில் வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனா். அதன்படி வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.
இந்நிலையில் போராட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையும் கோவை மாவட்டம், மாநகரில் உள்ள பல்வேறு வங்கிகளின் கிளைகள் அலுவலா்கள் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன. மேலும், பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து இரண்டாவது நாளாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள எஸ்பிஐ வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியா்கள், வங்கி தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
Image Caption
கோவையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.