1504c5agri1065854 
கோயம்புத்தூர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரிவிவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், புது தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவா் சு.பழனிசாமி தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி முழக்கமிட்டனா்.

இது குறித்து, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சு.பழனிசாமி பேசியதாவது:

கடந்த 70 நாள்களுக்கும் மேலாக புது தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த போராட்டத்தில் குளிா் காரணமாகவும், உடல் நிலை சரியில்லாததாலும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனா். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இது தொடா்பாக தமிழக சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

Image Caption

கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT