கோவை மாவட்டத்தில் புதிதாக 82 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் புதிதாக 82 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 418ஆக அதிகரித்துள்ளது.
தவிர இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் கோவையில் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 654ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 97 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 50 ஆயிரத்து 966 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 798 சிகிச்சையில் உள்ளனா்.