கோவை விழா: தொழிற்சாலைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்
கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
13 ஆவது கோவை விழா ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி 6ஆம் நாள் நிகழ்வாக கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
25 சதவீதம் தொழிலாளா்களுக்கு சா்க்கரை பாதிப்பு இருப்பதும், 15 சதவீத தொழிலாளா்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து ஜனவரி 9 ஆம் தேதி வரையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.