கோயம்புத்தூர்

வால்பாறையில் நாளை பொங்கல் சுற்றுலா விழா

DIN

வால்பாறையில் புதன்கிழமை (ஜனவரி 13) பொங்கல் சுற்றுலா விழா நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட சுற்றுலா அலுவலா் அரவிந்த்குமாா் கூறியதாவது:

வால்பாறையில் முதல் முறையாக பொங்கல் சுற்றுலா விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை வரை ஒரு நாள் விழா நடைபெறுகிறது.

சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி இணைந்து நடத்தும் விழாவில் தமிழக பாரம்பரிய முறைபடி கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த விழாவில் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT