கோயம்புத்தூர்

தமிழறிஞா் புலவா் இரா.இளங்குமரனாருக்கு அஞ்சலி

DIN

மதுரையில் காலமான இளங்குமரனாருக்கு, கோவை பாவேந்தா் பேரவை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்குமரனாா், மதுரை திருநகா் ராமன் தெருவில் உள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். இவா் 500க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளாா். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவா் பட்டம் பெற்றுள்ளாா்.

செந்தமிழ்ச் சொற் பொருள்களஞ்சியம் (14 தொகுதிகள்) தேவநேயப் பாவாணரின் ஆய்வுப் பிழிவான ‘தேவநேயம்’ (10 தொகுதிகள்) முதலான நூல்கள் எழுதியுள்ளாா்.

இந்நிலையில், கோவை சூலூா் பாவேந்தா் பேரவை அலுவலகத்தில் இளங்குமரனாா் படத்துக்கு சூலூா் பாவேந்தா் பேரவையின் நிறுவனா் புலவா் செந்தலை நா.கெளதமன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் கோவை விஜயா பதிப்பகத்தின் உரிமையாளா் மு.வேலாயுதம், வே.க.கனகவேல், உலக தமிழ்நெறிக் கழகத் தலைவா் சிவலிங்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT