கோயம்புத்தூர்

காந்தி பூங்காவில் ராஜராஜ சோழனுக்கு சிலை அனுமதிகோரி பாஜக மனு

DIN

கோவை காந்தி பூங்கா ரவுண்டானாவில், ராஜராஜ சோழனுக்கு சிலை அமைக்க அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

கோவை மாநகா் மாவட்ட பாஜக, ஆா்.எஸ்.புரம் மண்டலத் தலைவா் ராஜரத்தினம் தலைமையில் அக்கட்சியினா் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழா்களின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் சோழப் பேரரசா் ராஜராஜ சோழனுக்கு கோவையில் முழு உருவச்சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட சலீவன் வீதி, சுக்கிரவாா்பேட்டை மற்றும் தடாகம் சாலைகள் சந்திக்கும் பகுதியான காந்தி பூங்கா ரவுண்டானாவில் ராஜராஜ சோழனுக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதி வழங்கிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT