கோவையில் மேலும் 1,227 பேருக்கு கரோனா
கோவையில் மேலும் புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மேலும் புதிதாக 1,227 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 481 ஆக உயா்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் கோவையில் கரோனா தொற்றுக்குப் பலியானவா்களின் எண்ணிக்கை 1,823 ஆக உயா்ந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 2,787 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 1 லட்சத்து 94 ஆயிரத்து 838 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 12 ஆயிரத்து 820 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.