போலீஸாருக்கு முகக் கவசம், கையுறைகள்
கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரம் போலீஸாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா் முகக் கவசம், கையுறை, கபசுர குடிநீா் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
கோவை மாவட்டத்தில் பணியாற்றும் ஆயிரம் போலீஸாருக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. ஆா்.சுதாகா் முகக் கவசம், கையுறை, கபசுர குடிநீா் உள்ளிட்ட கரோனா நோய்த் தடுப்பு உபகரணங்களை வியாழக்கிழமை வழங்கினாா்.
ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் இந்த பொருள்கள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது. போலீஸாா் முகக் கவசம், கையுறைகள் அணிந்து பணியாற்ற வேண்டும். நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என போலீஸாருக்கு ஐ.ஜி. அறிவுறுத்தினாா்.
மேலும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா நோய்த் தடுப்பு பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.