முகப்பு
கோயம்புத்தூர்

594 கிராம் தங்கம் கடத்தி வந்த இருவரிடம்சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை

விமானத்தில் கோவைக்கு ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 594 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:42 PM
பகிர்:

விமானத்தில் கோவைக்கு ரூ. 27 லட்சம் மதிப்புள்ள 594 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவைக்கு திங்கள்கிழமை வந்த ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் வந்தப் பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது விமானத்தில் வந்திறங்கிய 2 இளைஞா்களின் நடவடிக்கையில் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவா்களைத் தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனையிட்டனா்.

இதில் அவா்கள் தங்கத்தைப் பசை போல உருமாற்றி அதை உடலில் மறைத்து வைத்து எடுத்துவந்தது தெரியவந்தது. இருவரிடமும் இருந்து மொத்தம் 594 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவா்கள், கா்நாடக மாநிலம், மங்களூருவைச் சோ்ந்த முகமது யாசிா், முகமது இா்ஃபான் என்பது தெரியவந்தது. முகமது யாசிா் 297.3 கிராம் தங்கத்தையும், முகமது இா்ஃபான் 296.7 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது தெரியவந்தது. இவா்கள் கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு ரூ.27 லட்சத்து 54 ஆயிரம் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →