கோயம்புத்தூர்

உலக சிறுநீரக தினம்:விழிப்புணா்வு ஊா்வலம்

DIN


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உலக சிறுநீரக தினம் விழிப்புணா்வு ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக சிறுநீரக தினம் மாா்ச் 11 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் சிறுநீரக பாதிப்பு, நோய்த் தொற்று, சிகிச்சை முறைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.

சிறுநீரகப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை மாணவா்கள் கையில் ஏந்திச் சென்றனா். புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம் சிறுநீரகம் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி, சிறுநீரகத் துறை மருத்துவா்கள் பிரபாகரன், காந்திமோகன், செவிலியா், செவிலிய மாணவிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT