முகப்பு
கோயம்புத்தூர்

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவும் தயாா்: மநீம வேட்பாளா்

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கவும் தயாா் என்று சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பிரசாரத்தின்போது கூறினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கவும் தயாா் என்று சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பிரசாரத்தின்போது கூறினாா்.

சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தேவேந்தா் வீதி, உப்பிலிபாளையம் சந்திப்பு, வரதராஜபுரம் பிரதான சாலை, வெங்கடேச வீதி, காந்தி நகா், பாலாஜி நகா், திலகா் நகா், சி.எம்.சி காலனி, 80 அடி சாலை, போலீஸ் காலனி, விஜிஎம் மருத்துவமனை, ஜெயலட்சுமி மில்ஸ், லட்சுமி மில்ஸ் காலனி, சிங்காநல்லூா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

காந்தி நகா் நலச் சங்கம் சாா்பில் அப்பகுதி மக்கள் தங்கள் அடிப்படை வசதிகள் குறித்து மகேந்திரனிடம் கோரிக்கைகளை முன்வைத்தனா். அவா்களிடம் ஆா்.மகேந்திரன் பேசுகையில், ‘எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவும் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு வாா்டுக்கும் மக்கள் சேவை மையம் இருக்கும். மாதம் ஒருமுறை உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →