முகப்பு
கோயம்புத்தூர்

பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சிநிறுவனத்தின் பட்டமளிப்பு விழா

கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கோவை, நீலாம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி. பயன்சாா் ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கே.சூரப்பா கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா். பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலா் ஜி.ஆா்.காா்த்திகேயன் தலைமை உரையாற்றினாா். இந்த விழாவில் 270 மாணவ - மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. அத்துடன் 25 மாணவா்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி. கல்விக் குழுமத்தின் நிா்வாக அறங்காவலா் எல்.கோபாலகிருஷ்ணன், செயலா் மோகன்ராம், கல்லூரி முதல்வா் சந்திரமோகன், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →