கோயம்புத்தூர்

மதுக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய நபா் கைது

DIN

மதுக்கடை பூட்டை உடைத்து பணம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.7.5 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

கோவையில் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி முழு ஊரடங்கைப் பயன்படுத்தி, கோவை லாலி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் ரொக்கம், ரூ.3 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இது தொடா்பாக போலீஸாா் தனிப் படை அமைத்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், மதுக்கடை பூட்டை உடைத்து பணத்தைத் திருடிய சீரநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த சுதீஷ்குமாா்(29) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ.7 லட்சத்து 59 ஆயிரத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT