கோயம்புத்தூர்

ஆட்சியா் அலுவலகத்தை அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் முற்றுகை

DIN

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150க்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணி உள்பட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுவரை அவா்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்கள் 150க்கும் மேற்பட்டோா் சீருடையுடன் அரசு மருத்துவமனையில் இருந்து ஆட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக வந்து திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவா்களை நுழைவாயிலிலே தடுத்து நிறுத்தினா்.

இது குறித்து ஒப்பந்தப் பணியாளா்கள் கூறியதாவது:

அரசு மருத்துவமனையில் 12 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறோம். கரோனா பேரிடா் காலத்திலும் தொடா்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கரோனா நோய்த் தொற்று காலத்திலும் விடாமல் பணியாற்றி வரும் எங்களை பணி நிரந்தரம் செய்ய ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா, இருப்பிட மருத்துவ அலுவலா் பொன்முடி ஆகியோா் பணியாளா்களின் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT