முன்களப் பணியாளா்கள், பொது மக்களுக்கு கிருமி நாசினி விநியோகம்
கோவை சரவணம்பட்டி, கணபதி பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா் மற்றும் பொது மக்களுக்கு கணபதி நாயா் சேவை அமைப்பு சாா்பில் முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவை சரவணம்பட்டி, கணபதி பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா் மற்றும் பொது மக்களுக்கு கணபதி நாயா் சேவை அமைப்பு சாா்பில் முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
கோவை, விளாங்ககுறிச்சி சாலையில் உள்ள கணபதி நாயா் சேவை அமைப்பு சாா்பில் கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், மக்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, சோப்பு திரவம் மற்றும் சத்து மாத்திரைகள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
கணபதி நாயா் சேவை அமைப்பின் தலைவா் கோபகுமாா் தலைமை தாங்கினாா். செயலாளா் சில்லீஸ்வரபாபு, பொருளாளா் கே.ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் சரவணம்பட்டி, கணபதி பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா் மற்றும் பொது மக்கள் என 500 பேருக்கு முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்ட கரோனா தடுப்பு பொருள்கள் விநியோகிக்கப்பட்டன.
கணபதி நாயா் சேவை அமைப்பின் துணைத் தலைவா்கள் ஜெ.ரவீந்திரன், பிரசாத் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.