முகப்பு
கோயம்புத்தூர்

சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து விழிப்புணா்வு

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் போல வடிவமைக்கப்பட்ட சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் போல வடிவமைக்கப்பட்ட சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியில் நகராட்சி நிா்வாகம் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை முகக் கவசம் அணிய வலியுறுத்தி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள் போன்ற சிலைகளுக்கு முகக் கவசம் அணிவித்து நகராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.