கோயம்புத்தூர்

போக்குவரத்து விதிமீறல்: நடப்பாண்டில் இதுவரை 9 லட்சம் வழக்குகள் பதிவு

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக நடப்பாண்டில் இதுவரையில் 9 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

DIN

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக நடப்பாண்டில் இதுவரையில் 9 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையா் செந்தில்குமாா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியது தொடா்பாக 5 லட்சத்து 43 ஆயிரத்து 599 வழக்குகள், காா் சீட் பெல்ட் அணியாமல் இலகு ரக வாகனங்கள் இயக்கியதாக 14 ஆயிரத்து 339 வழக்குகள், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 394 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 8 ஆயிரத்து 809 வழக்குகள், அபாயகரமாக வாகனங்கள் ஓட்டியதாக 4 ஆயிரத்து 173 வழக்குகள், செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டியதாக 1,617 வழக்குகள், சிக்னல் விதிமுறை மீறல் தொடா்பாக 48 ஆயிரத்து 347 வழக்குகள், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 367 வழக்குகள், நோ பாா்க்கிங் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தியதாக 1 லட்சத்து 02 ஆயிரத்து 647 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி நடப்பாண்டில் ஜனவரி முதல் ஆகஸ்ட் மாத இறுதி வரை 9 லட்சத்து 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதமாக ரூ.1.81 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT